திருகோணமலையில் தமிழ் - சிங்கள தரப்புக்கிடையில் பாரிய மோதல்!


இச்சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர்களைத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் - சிங்கள தரப்புக்கிடையில் பாரிய மோதல்! அறுவர் படுகாயம் : திருகோணமலையில் பதற்றம் (Video)


திருகோணமலை - திருக்கடலூர் மற்றும் விஜிதபுர ஆகிய கிராமத்திலுள்ள தமிழ் - சிங்கள மக்களுக்கிடையில் இன்றைய தினம் (06.04.2023) பாரிய மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலைக் கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பான்மை இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடற்பரப்பில் சிறுபான்மை இனத்தவகள் மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து அப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதியில் பெருமளவிலான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டதையடுத்து, தற்போது நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

Post a Comment

0 Comments